25.3.2024 முதல் 31.3.2024 வரை
தேவைகள் பூர்த்தியாகும் வாரம். லாப ஸ்தானத்தை நோக்கி குரு சென்று கொண்டிருக்கிறார். காலைச் சுற்றிய பாம்பாக இருந்த பிரச்சினைகள் விலகும் காலம் வந்து விட்டது. அஷ்டமச் சனியாலும் 10-ம்மிட குருவாலும் பறிபோன பதவிகள் தேடி வரும். அன்றாடம் காய்ச்சி முதல் அரசியல் பிரமுகர்கள் வரை உள்ள கடக ராசியினர் காலரை தூக்கி விட்டு வெற்றி நடை போடும் நேரம் இது. வெளியில் தலை காட்ட முடியாமல் நிலவிய பிரச்சினைகள் விலகிச் செல்லும். துன்பங்கள் உங்களை துரத்திய காலம் சென்று உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் நுகரும் நேரம் வந்து விட்டது.தொட்டது துலங்கும். தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாகும். பெண்களுக்கு புகுந்த வீட்டார் மற்றும் கணவரின் ஒத்துழைப்பால் நிம்மதி அதிகரிக்கும். தம்பதிகள் மனம்விட்டு பேசி குடும்பத்தை சீர் செய்வீர்கள்.
எதிர்பாராத சில தனவரவுகளால் சேமிப்பு உயரும். பேச்சு வன்மையால் காரியம் சித்தியாகும். வீடு, மனை, சொத்து வாங்குவது விற்பதில் லாபம் உண்டாகும். மாணவர்கள் பாடத்தை புரிந்து படித்து வெற்றிய டைவீர்கள். உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும். எடுத்த செயலில் வெற்றி பெற பிரத்தியங்கரா தேவிக்கு அரளிப்பூ மாலை அணிவித்து வணங்குவது மிக நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406