18.3.2024 முதல் 24.3.2024 வரை
அதிர்ஷ்டம் அரவணைக்கும் வாரம். ராசிக்கு 8-ம்மிடமான அஷ்டம ஸ்தானத்தில் சனி, செவ்வாய், சுக்ரன். இது கடகத்தினருக்கு யோகமா? அவயோகமா?. அஷ்டம ஸ்தானத்தில் நிற்கும் கிரகங்கள் தன ஸ்தானத்தை பார்க்கிறது. எப்பொழுதுமே கிரகங்கள் உயிர்காரகதுவத்தை பாதித்தால் பொருளை தந்துவிடும். இப்பொழுது தன ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் கடகத்திற்கு இது அதிர்ஷ்டமான காலமாகும். இதுவரை வருமானக் குறைபாட்டால் அவதி அடைந்வர்களுக்கு இல்லை என்ற நிலை இனி இல்லை. கொடுக்கல், வாங்கல் திருப்தியாக இருக்கும். மனக்கசப்பை ஏற்படுத்திய உறவுகள் உங்களின் உண்மையான அன்பை புரிந்து கொள்வார்கள். விபத்து, கண்டம், சர்ஜரி, அவமானத்தால் ஏற்பட்ட மன பாரம் விலகும்.
வீடு வாங்குவது, நிலம் வாங்குவது வீடு கட்டி குடியேறுவது போன்ற சுப பலன்கள் நடக்கும். அஷ்டமச் சனி காலத்தில் இது போன்று சொத்தில் முதலீடு செய்யும் போது வீண் விரயங்கள் குறையும். சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்ட சொத்து பணம், நகை, பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். திங்கட்கிழமை வெண்மையான மலர்களால் அம்பிகையை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406