8.1.2024 முதல் 14.1.2024 வரை
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் லாப அதிபதி சுக்ரன் சஞ்சரிப்பதால் வாழ்க்கையில் நிலவிய கஷ்டங்கள் விலகும். திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். 5-ம் அதிபதி செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் தைரியமும், தெம்பும் அதிகரிக்கும். துணிந்து சில முடிவுகளை எடுத்து முன்னேறு வீர்கள். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். விரும்பிய உதவிகள் தேடி வரும்.வழக்குகளில் புதிய திருப்பம் ஏற்படும். 3-ல் கேது இருப்பதால் குடும்ப உறவுகளுக்காக ஜாமீன் பொறுப்பு ஏற்கும் நிர்பந்தம் உண்டாகும்.
எதிர்காலத்தில் அது உங்களை தர்ம சங்கடத்தில் மாட்ட வைக்கும் என்பதால் கவனம் தேவை. பிள்ளை களுக்கு கல்வியில் நாட்டம் உண்டாகும். ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும்.13.1.2024 இரவு 11.35-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் தெளிவாக சிந்தித்து திட்டமிட்டு செயல்பட முடியாத நிலை இருக்கும். அமாவாசையன்று அம்பிகையை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406