ஆன்மிக களஞ்சியம்

வாளை வைத்து வழிபடும் பக்தர்கள்

Published On 2024-02-25 13:53 GMT   |   Update On 2024-02-25 13:53 GMT
  • மன்னன் அதியமானுக்கு கண்கண்ட தெய்வமாக கால பைரவரை வழிபட்டு வந்துள்ளார்.
  • குறிப்பாக அதியமான் மன்னர் போருக்கு செல்லும் முன் வாளை வைத்து பூஜை செய்வார்.

மன்னன் அதியமானுக்கு கண்கண்ட தெய்வமாக கால பைரவரை வழிபட்டு வந்துள்ளார்.

இதனால் அதியமான், எப்போதும் கோவிலில் நடைபெறும் வழிபாடுகளில் கலந்து கொள்வார்.

குறிப்பாக அதியமான் மன்னர் போருக்கு செல்லும் முன் வாளை வைத்து பூஜை செய்வார்.

அதன் அடையாளமாக இன்றும் இக்கோவிலில் வாள் வைத்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

கோவில் அமைவிடம்

தருமபுரி நகரில் இருந்து சேலம் செல்லும் பாதையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது தட்சிண காசி கால பைரவர் கோவில்.

தருமபுரி பஸ் நிலையத்தில் இருந்து 10 நிமிடத்துக்கு ஒரு பஸ் வீதம் அதியமான் கோட்டைக்குச் செல்கிறது.

பஸ் நிறுத்தத்துக்கு அருகிலேயே கோவில் அமைந்துள்ளது

Tags:    

Similar News