ஆன்மிக களஞ்சியம்

துளசி பூஜை செய்வது எப்படி?

Published On 2024-02-29 12:59 GMT   |   Update On 2024-02-29 12:59 GMT
  • வீட்டில் பூஜிக்கும் சாளக்கிராமம் இருந்தால் அதையும் சேர்த்து பூஜிக்கலாம்.
  • இந்த பூஜையின் போது பால் பாயாச நைவேத்தியம் செய்வது விசேஷமானது.

வீடுகளில் துளசி மாடம் வைத் துள்ளவர்கள் துளசி பூஜையை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிகளில் செய்வதுண்டு.

ஆனாலும், கார்த்திகை மாதம் சுக்லபட்ச துவாதசியில் விசேஷ பூஜையாக துளசி பூஜையைச் செய்வார்கள்.

துளசிக்கு அன்று விவாகம் நடந்த நாளாகவும் கூறுவார்கள்.

துளசியின் விசேஷ பூஜை ஐப்பசி அல்லது கார்த்திகை மாதம் சுக்லபட்ச துவாதசியன்று பிருந்தாவன பூஜையாக விமரிசையாக செய்யப்படுகிறது.

துளசி மாடத்தில் நெல்லி மரக்குச்சியை நட்டு, மகா விஷ்ணுவை ஆவாகனம் செய்து ஷோட சோபசாரங்கள் செய்ய வேண்டும்.

வீட்டில் பூஜிக்கும் சாளக்கிராமம் இருந்தால் அதையும் சேர்த்து பூஜிக்கலாம்.

இந்த பூஜையின் போது பால் பாயாச நைவேத்தியம் செய்வது விசேஷமானது.

Tags:    

Similar News