ஆன்மிக களஞ்சியம்

கடன் தொல்லைகளை தீர்க்கும் விரதம்

Published On 2024-05-08 12:00 GMT   |   Update On 2024-05-08 12:02 GMT
  • விநாயக விரதத்தைத் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் செய்தல் வேண்டும்.
  • அப்படி இயலாதவர்கள் தமிழ் மாதத்தின் முதல் வெள்ளியோ அல்லது மூன்றாவது வெள்ளிக் கிழமையோ ஏற்றுச் செய்யலாம்.

ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியை மிகப் பிரபலமாகவும் சிறப்பாகவும் கொண்டாடி வரும் நாம், அவர் குறித்து வெள்ளி விரதம், செவ்வாய் விரதம், சதுர்த்தி விரதம், குமார சஷ்டி விரதம், சங்கடஹர சதுர்த்தி, தூர்வா கணபதி விரதம், சித்தி விநாயக விரதம், துர்வாஷ்டமி விரதம், விநாயக நவராத்திரி விரதம் ஆகியவற்றைக் கொண்டாடுவதும் ஏற்றுச் செய்வதும் மிகக் குறைவே.

தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விரத முறைகளில் குறிப்பிட்டபடி விநாயகர் அருள் தருகின்ற இந்த விரதத்தை வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் தொடங்குதல் வேண்டும்.

விநாயக விரதத்தைத் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் செய்தல் வேண்டும்.

அப்படி இயலாதவர்கள் தமிழ் மாதத்தின் முதல் வெள்ளியோ அல்லது மூன்றாவது வெள்ளிக் கிழமையோ ஏற்றுச் செய்யலாம்.

ஒரு பலனைக் குறித்து முற்காலத்தில் ஆண்களும், பெண்கள் கடைப்பிடிக்கும் இந்த விரதத்தால் பல குடும்பங்களில் கடன் தொல்லைகள் நீங்கி விரைவாகப் பலன் கிடைத்துள்ளது.

Tags:    

Similar News