ஆன்மிக களஞ்சியம்
null

திருவண்ணாமலையின் பிரம்மாண்ட கோபுரங்கள்

Published On 2023-10-15 11:43 GMT   |   Update On 2023-10-17 06:02 GMT
  • தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் இரண்டு இரண்டு கோபுரங்களாக உள்ளன.
  • தெற்குக் கோபுரம், திருமஞ்சன கோபுரம் என்ற பெயரைத் தாங்கி மங்கலமாக நிற்கிறது.

கிழக்குப் பக்கத்தில் வானளாவ நின்று காட்சியளிக்கும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படுகிறது.

இது 217 அடி உயரமுடையது. பதினொரு நிலைகளையும் மாடங்களையும் உடையது.

மேற்குக் கோபுரம், பேய்க் கோபுரம் என அழைக்கப்படுகிறது.

மேலக் கோபுரம் என்பது மேக்கோபுரமாகி அது நாளடைவில் பேய்க் கோபுரமாக மருவியது.

தெற்குக் கோபுரம், திருமஞ்சன கோபுரம் என்ற பெயரைத் தாங்கி மங்கலமாக நிற்கிறது.

வடக்குக் கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் என்றழைக்கப்படுகிறது.

வடக்குத் தெற்காக உள்ள கோவில் மதில் சுவரின் நீளம் 700 அடிகள்.

தென் மதில் 1479 அடி நீளம். வடக்கு மதில் 1590 அடி நீளம்.

தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் இரண்டு இரண்டு கோபுரங்களாக உள்ளன.

ராஜ கோபுரம் மட்டும் ஒற்றையாய் அமைந்துள்ளது.

Tags:    

Similar News