ஆன்மிக களஞ்சியம்

சிவராத்திரி வழிபாடு முறைகள்

Published On 2023-12-17 12:58 GMT   |   Update On 2023-12-17 12:58 GMT
  • சிவபெருமானுக்கு நல்ல தூய்மை ஆன ஆடையை அணிவிக்க வேண்டும்.
  • விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும்.

1. சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும். (நீராட்டல்)

2. மணம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சிமுதல் திருத்தாள் வரைத் தூவ வேண்டும். தூவும் பொழுது நமச்சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.

3. ஓதிக் கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும்.

4. சிவாலயங்களைச் சாணமிட்டு அலகிட்டு (துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல்) வாழ்த்த வேண்டும்.

5. நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.

6. சிவபெருமானுக்கு நல்ல தூய்மை ஆன ஆடையை அணிவிக்க வேண்டும்.

7. எருக்க மலர் மாலைகளைப் பெருமான் தலையில் வட்டமாக அணிய வேண்டும்.

8. சிவதண்டமான கட்டங்களும், (மழுவாயுதம்) கபாலமும் ஏத்தி அவன் புகழைப் பாட வேண்டும்.

9. அஷ்டங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும், பெண்கள் ஐந்தங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

10. விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும்.

இவ்வாறு லிங்க புராணம் கூறுகிறது.

Tags:    

Similar News