ஆன்மிக களஞ்சியம்
null

கண்ணொளி கீரையும் உண்ணாமுலையாளும்

Published On 2023-10-15 11:36 GMT   |   Update On 2023-10-17 06:03 GMT
  • பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள்.
  • ரமணர் ஆசிரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர்.

பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள்.

சித்த வைத்தியத்தில் இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக,

பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவார் என்கிறார்கள்.

இப்படி சொன்னால்தான், இளசுகள் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று விரும்பி சாப்பிடுவார்களாம்.

மீனின் பெயர் செல்லாக்காசு:

திருவண்ணாமலையில் உள்ள ரமணர் ஆசிரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர்.

இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக் கொத்து.

இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு.

அடேங்கப்பா இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால்,

இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி! என்ற பதில் மட்டும்தான் கிடைக்கிறது.

Tags:    

Similar News