செய்திகள்

ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலை வாசலில் தற்கொலைப்படை தாக்குதல் - 7 ஊழியர்கள் பலி

Published On 2018-10-31 04:57 GMT   |   Update On 2018-10-31 04:57 GMT
ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலை அருகே ஊழியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். #AfghanistanBlast #PulECharkhiPrison
காபூல்:

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், காபூல் நகரில் உள்ள புல்-இ-சார்க்கி சிறைச்சாலை ஊழியர்கள் இன்று காலை பணிக்கு வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். அவர்கள் வந்த வாகனம் காலை 7.30 மணியளவில் சிறைச்சாலையின் பிரதான வாயிலை நெருங்கியபோது, திடீரென அந்த வாகனத்தை நோக்கி வந்த ஒரு பயங்கரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.



இதில், சிறைச்சாலை வாகனம் கடுமையாக சேதம் அடைந்தது. வாகனத்தினுள் இருந்த 7 ஊழியர்கள் உடல்சிதறி உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

சிறைச்சாலை வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக அப்பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. #AfghanistanBlast #PulECharkhiPrison
Tags:    

Similar News