செய்திகள்

வாணியம்பாடி அருகே ஆட்டோ டிரைவர் அடித்து கொலை - 3 பேர் கைது

Published On 2019-05-24 08:21 GMT   |   Update On 2019-05-24 08:21 GMT
வாணியம்பாடி அருகே ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாணியம்பாடி:

ஆம்பூர் அடுத்த சோளூரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுமித்ரா இவர்களுக்கு 1 மகள் உள்ளார்.

பாஸ்கர் நேற்று தனது குடும்பத்தினருடன் வாணியம்பாடி அருகே உள்ள சின்ன கொள்ளகுப்பம் பகுதியை சேர்ந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது ஆட்டோவில் சென்றார்.

சின்ன கொள்ளகுப்பம் பகுதியில் ஆட்டோ சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த 7 பேர் கும்பல் மீது மோதுவதுபோல் சென்றுள்ளது.

இதனை அந்த 7 பேர் கும்பல் தட்டி கேட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த 7 பேர் கும்பல் பாஸ்கரை ஆட்டோவில் இருந்து கீழே இறக்கி சரமாரியாக தாக்கினர்.இதில் பாஸ்கர் படுகாயமடைந்தார்.

அவரை மீட்ட உறவினர்கள் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பாஸ்கர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து பாஸ்கர் தரப்பில் வாணியம்பாடி தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார், சூர்யா, வெள்ளையன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகி உள்ள 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News