செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்- தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார்?

Published On 2019-05-24 11:34 GMT   |   Update On 2019-05-24 11:34 GMT
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் யார்? என்பதை தெரிந்து கொள்வோம்.
சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதில் பல தொகுதிகளில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக திண்டுக்கல் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வேலுசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவைவிட கூடுதலாக 5 லட்சத்து 38 ஆயிரத்து 972 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

வேலுசாமி பெற்ற வாக்குகள் 7 லட்சத்து 46,523 ஆகும். ஜோதிமுத்துவுக்கு கிடைத்தது 2 லட்சத்து 7 ஆயிரத்து 551 ஆகும்.

இதற்கு அடுத்தபடியாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு 5 லட்சத்து 7 ஆயிரத்து 955 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

டி.ஆர்.பாலுவுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 281 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட வைத்திலிங்கத்துக்கு 2 லட்சத்து 85 ஆயிரத்து 326 ஓட்டுகளும் கிடைத்துள்ளது.

வடசென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டாக்டர் கலாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் மோகன்ராஜாவை 4 லட்சத்து 61 ஆயிரத்து 518 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

டாக்டர் கலாநிதிக்கு 5 லட்சத்து 90 ஆயிரத்து 986 ஓட்டுகளும், மோகன்ராஜிக்கு ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 468 ஓட்டுகளும் கிடைத்துள்ளன.

திருச்சி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 4 லட்சத்து 59 ஆயிரத்து 286 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

திருநாவுக்கரசுவுக்கு மொத்தம் 6 லட்சத்து 21 ஆயிரத்து 285 ஓட்டுகளும், அவரை எதிர்த்து தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட இளங்கோவனுக்கு ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 999 ஓட்டுகளும் கிடைத்துள்ளது.

கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி 4 லட்சத்து 20,546 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஜோதிமணிக்கு மொத்தம் 6 லட்சத்து 95,697 ஓட்டுகளும் அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தம்பிதுரைக்கு 2 லட்சத்து 75,151 ஓட்டுகளும் கிடைத்துள்ளது.


பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாரிவேந்தர் 4 லட்சத்து 3,518 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

பாரிவேந்தருக்கு 6 லட்சத்து 83,697 ஓட்டுகளும் அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சிவபதிக்கு 2 லட்சத்து 80,179 ஓட்டுகளும் கிடைத்துள்ளது.

தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி 3 லட்சத்து 47,209 ஓட்டுகள் வித்தியாசத்திலும், கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கவுதமசிகாமணி 3 லட்சத்து 99,919 ஓட்டுகள் வித்தியாசத்திலும், அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 3 லட்சத்து 28,956 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

மத்திய சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறன் 3 லட்சத்து 1,520, திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் 3 லட்சத்து 56,955, திருவண்ணாமலை தொகுதி தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரை 3 லட்சத்து 4,187 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

அவருக்கு 5 லட்சத்து 229 ஓட்டுகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகருக்கு 4 லட்சத்து 97,010 ஓட்டுகளும் கிடைத்துள்ளது. வித்தியாசம் 3,219 ஓட்டுகள் ஆகும்.
Tags:    

Similar News