செய்திகள்
வாலாஜா அருகே கோவில் குளத்தில் ஆண்பிணம் - கொலை செய்து வீசபட்டாரா?
வாலாஜா அருகே கோவில் குளத்தில் ஆண் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாலாஜா:
வாலாஜா அருகே உள்ள வீ.சி. மோட்டூர் கெங்கையம்மன் கோவில் குளத்தில் இன்று காலை 50 வயது மதிக்கதக்க ஆண் பிணமாக மிதந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வாலாஜா போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை
இதையடுத்து உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் தண்ணீரில் முழ்கி இறந்தாரா? அல்லது கொலை செய்யபட்டு குளத்தில் வீசபட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.