செய்திகள்

வேலூர் அருகே பைக் மோதி கட்டிட மேஸ்திரி பலி

Published On 2019-01-14 11:00 GMT   |   Update On 2019-01-14 11:00 GMT
வேலூர் அருகே பைக் மோதி கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்:

வேலூர் அடுத்த சந்தனகொட்டா கொளமேட்டை சேர்ந்தவர் ரேணு (வயது 58). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று மாலை மேல்வெங்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த பைக் இவர் மீது மோதியது இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரேணு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News