செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2019-01-12 18:13 GMT   |   Update On 2019-01-12 18:13 GMT
கிருஷ்ணகிரி அருகே கல்லூரி மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பவர்ஹவுஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் சினேகபிரியா (வயது 18). தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் முதலாம் ஆண்டில் ஒரு பாடத்தில் அவர் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட சினேகபிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News