செய்திகள்

போலி ரசீது வழங்கி ரூ.1 கோடி மோசடி- அரியலூர் மின்வாரிய பெண் அதிகாரி மீது வழக்கு

Published On 2018-12-22 16:51 GMT   |   Update On 2018-12-22 16:51 GMT
மின் இணைப்பு வழங்குவதில் போலி ரசீது கொடுத்து ரூ.1கோடி மோசடி செய்த அரியலூர் மின்வாரிய பெண் அதிகாரி மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு வருவாய் மேற்பார்வையாளராக சோபனா பணியாற்றி வந்தார். இந்த நிலையில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் சோபனா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். 

இதனிடையே 5 பேர்கள் கொண்ட மின்வாரிய தணிக்கை குழுவினர் ஆய்வு செய்ததில் 2013 முதல் 2018 வரை சோபனா வேலை பார்த்த காலங்களில் பஞ்சாயத்துகளில் மின் இணைப்பு வழங்குவதில் போலி ரசீது வழங்கி சுமார் ரூ.1கோடி வரையில் மோசடி செய்தது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக உதவி மின் பொறியாளர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சோபனா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News