search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake receipt"

    மின் இணைப்பு வழங்குவதில் போலி ரசீது கொடுத்து ரூ.1கோடி மோசடி செய்த அரியலூர் மின்வாரிய பெண் அதிகாரி மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு வருவாய் மேற்பார்வையாளராக சோபனா பணியாற்றி வந்தார். இந்த நிலையில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் சோபனா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். 

    இதனிடையே 5 பேர்கள் கொண்ட மின்வாரிய தணிக்கை குழுவினர் ஆய்வு செய்ததில் 2013 முதல் 2018 வரை சோபனா வேலை பார்த்த காலங்களில் பஞ்சாயத்துகளில் மின் இணைப்பு வழங்குவதில் போலி ரசீது வழங்கி சுமார் ரூ.1கோடி வரையில் மோசடி செய்தது கண்டறியப்பட்டது.

    இது தொடர்பாக உதவி மின் பொறியாளர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சோபனா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    இன்சூரன்சு நிறுவனத்தின் பெயரில் போலி ரசீது கொடுத்து மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை திருமங்கலம் அருகேயுள்ள செக்கா னூரணியை சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். உசிலம்பட்டி அருகில் உள்ள குப்பானம்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (35) என்பவர் மூலம் வருடாந்திர லாரி இன்சூரன்சை புதுப்பித்து வந்தார்.

    இந்த நிலையில் ஜெயபாண்டிக்கு சொந்தமான லாரி சம்பவத்தன்று விபத்துக்கு உள்ளானது. இதையடுத்து அவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மதுரை கிளையில் இழப்பீடு கோரி விண்ணப்பித்து உள்ளார்.

    அப்போது தான் ஜெயபாண்டி தாக்கல் செய்த இன்சூரன்ஸ் ரசீது போலி என்ற விவரம் தெரியவந்தது.

    மதுரை தனியார் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் பாலமுருகன், இது தொடர்பாக உசிலம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து ரசீது வழங்கியதாக அலெக்ஸ்பாண்டியனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    ×