செய்திகள்
நாமக்கல் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
நாமக்கல் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள தூசூரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகள் தேன்மொழி (வயது 18). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டில் தனியாக இருந்த தேன்மொழி தூக்குப்போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. அவரை, அவரது தாயார் கல்யாணி அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே தேன்மொழி பரிதாபமாக இறந்தார்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தீராத வயிற்று வலி காரணமாக தேன்மொழி தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் அருகே உள்ள தூசூரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகள் தேன்மொழி (வயது 18). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டில் தனியாக இருந்த தேன்மொழி தூக்குப்போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. அவரை, அவரது தாயார் கல்யாணி அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே தேன்மொழி பரிதாபமாக இறந்தார்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தீராத வயிற்று வலி காரணமாக தேன்மொழி தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.