லைஃப்ஸ்டைல்

சூப்பரான முள்ளங்கி இறால் குருமா

Published On 2019-01-07 08:37 GMT   |   Update On 2019-01-07 08:37 GMT
சப்பாத்தி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முள்ளங்கி இறால் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்  :

இறால் - 1/2 கிலோ
முள்ளங்கி - 1/4 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
மஞ்சள் தூள் - சிறிதளவு
தேங்காய் துருவல் - 1/4 மூடி
பட்டை - 2
லவங்கம் - 2
இஞ்சி, பூண்டு - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 7
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி



செய்முறை  :

இறாலைச் சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிளகாயை கீறிக் கொள்ளவும்.

தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.

முள்ளங்கியை வட்டமாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை லவங்கம் போட்டுத் தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கிதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

அடுத்து சுத்தம் செய்த இறாலை, முள்ளங்கி சேர்த்து வதக்கவும்.

தேவையான உப்பு சேர்த்து, அரைத்த தேங்காயை சேர்க்கவும்.

முள்ளங்கியும், இறாலும் நன்கு வெந்ததும், நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News