என் மலர்
நீங்கள் தேடியது "Prawn Recipes"
- கேரளாவில் இறால் மொய்லி மிகவும் பிரபலமான உணவு.
- இதனை இட்லி, தோசை, இடியாப்பம், சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
இறால் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி -1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிது
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - தேவையான அளவு
தேங்காய் பால் - 2 கப் (முதல் பால்)
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு/வினிகர் - 1 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - கால் கப்
செய்முறை
இறாலை நன்கு சுத்தம் செய்து அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இறால் மற்றும் உப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
நிறம் மாறியதும் தூள் வகைகள் சேர்த்து ஒரு நிமிடம் சிறுதீயில் வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தண்ணீர் ஊற்றவும்.
பின்பு தேங்காய் பாலைச் சேர்க்கவும்.
நுரைத்து கொதி வந்ததும் அடுப்பை அணைத்து எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
சுவையான இறால் மொய்லி தயார்.
இதனை இட்லி, தோசை, இடியாப்பம், சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
இறால் - 100 கிராம்
முட்டை - 2
மிளகு தூள் - சிறிதளவு
உப்பு - அரை ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
மிளகாய் தூள் - சிறிதளவு
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயத்தாள் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துசுமார் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அதனை தோசை கல்லையில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும். அடுத்ததாக அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.
முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கிய இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறலாம்.
இப்போது சுவையான இறால் முட்டை பொடிமாஸ் ரெடி.
இறால் - 250 கிராம்,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 25 கிராம்,
நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு,
கறிவேப்பிலை - 1 கொத்து,
எண்ணெய் - 100 மி.லி.,
பச்சைமிளகாய் - 5,
சோம்பு தூள் - 2 டீஸ்பூன்,

செய்முறை :
இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சின்ன வெங்காயம், பூண்டு, கரம்மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் இறால், உப்பு, சோம்பு தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
இறால் நன்கு வெந்து தண்ணீர் சுண்டியதும், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
சூப்பரான இறால் சுக்கா ரெடி.
இறால் - 100 கிராம்
முட்டை - 2
வெங்காயம் - 2,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிறிது,
உப்பு - 1/2 ஸ்பூன்,
வெங்காயத்தாள் - சிறிதளவு
மிளகு தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து தோசை கல்லையில் போட்டு வறுத்து கொள்ளவும்.
வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கி இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.
இறால் - 300 கிராம்
முட்டை - 3
வடித்த சாதம் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 2
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சிபூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
உதிரியாக வேக வைத்த சாதத்தை ஆற வைத்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறாலை போட்டு அதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பிசிறி வைத்த இறால் கலவையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு கரம் மசாலாத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, 10 நிமிடம் தீயைக் குறைத்து இறாலை வேக விடவும்.
இறால் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி, முட்டைக்குத் தேவையான உப்பு மட்டும் சேர்த்து முட்டையை இறாலுடன் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு வேகவிடவும்.
கடைசியாக அதனுடன் ஆற வைத்த சாதம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
இறால் - 1/2 கிலோ
முள்ளங்கி - 1/4 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
மஞ்சள் தூள் - சிறிதளவு
தேங்காய் துருவல் - 1/4 மூடி
பட்டை - 2
லவங்கம் - 2
இஞ்சி, பூண்டு - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 7
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
இறாலைச் சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகாயை கீறிக் கொள்ளவும்.
தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.
முள்ளங்கியை வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை லவங்கம் போட்டுத் தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து சுத்தம் செய்த இறாலை, முள்ளங்கி சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து, அரைத்த தேங்காயை சேர்க்கவும்.
இறால் - 500 கிராம்
கார்ன்ஃப்ளார் - 50 கிராம்
மைதா மாவு - 25 கிராம்
முட்டை - 1
உப்பு - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 50 கிராம்
இடித்த காய்ந்த மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
செலரி இலைகள் - சிறிதளவு
இஞ்சி, பூண்டு - 10 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயத்தாள் - 10 கிராம்

செய்முறை:
ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
செலரி, இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இறாலை நன்றாக சுத்தமாக கழுவி கார்ன்ஃப்ளார், மைதா, முட்டை, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து 30 நிமிடம் ஊறவைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த இறாலை போட்டு பொரித்து எடுக்கவும்.
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், செலரி, காய்ந்த மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
இதில் பொரித்த இறால், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், வெங்காயத்தாள் தூவிக் கிளறி இறக்கவும்.
இறால் - 200 கிராம்
தக்காளி - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
சோம்பு தூள் - அரை ஸ்பூன்
கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
தனியா தூள் - கால் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
பஜ்ஜி மாவு - 1 கப்

செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பஜ்ஜி மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
இறாலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் இறால், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இறால் நன்றாக வெந்ததும் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கி அதை பஜ்ஜி மாவில் போட்டு நன்றாக கலக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள மாவை டீஸ்பூன் எடுத்து சிறிது சிறிதாக ஊற்றவும்.
வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
இறால் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி -2
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சோம்பு தூள் - 1/ 2டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
மல்லித்தூள் -2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை :
இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு போட்டு லேசாக நிறம் மாறியதும் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு குழைய நன்றாக வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் அதில் இறாலை போட்டு 10 நிமிடம் வதக்கியதும் சோம்புத்தூள், மிளகுத்தூள் போட்டு கிளறி விடவும்.
தொக்கு சுருள வதங்கி வந்தவுடன் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
இறால் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பூண்டு - மூன்று பல்
தக்காளி - மூன்று
எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பட்டை - சிறிதளவு
கறிவேப்பிலை - மூன்று கொத்து
மிளகாய்த்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் - தேவையான அளவு

செய்முறை :
இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்க வேண்டும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
தேங்காய், சீரகத்தை நைசாக அரைக்க வேண்டும்.
சோம்பை நன்றாக தட்டி வைக்க வேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் இறாலை சேர்க்க வேண்டும்.
இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
சூப்பரான தேங்காய் சேர்த்த இறால் குழம்பு ரெடி.
முருங்கைக்காய் - 1
இறால் - கால் கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பொடித்த மிளகு சீரகம் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கரம் மசால் பொடி - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
அரைத்த தேங்காய் விழுது - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு,
கடுகு - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பொடித்த மிளகு சீரகம் சேர்த்து வதக்கவும்.
பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியவுடன் முருங்கைக்காய் இறால் சேர்த்து கிளறி விடவும்.
5 நிமிடம் கழித்து கரம் மசாலா சேர்த்து, தேவைாயன அளவு தண்ணீர், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கடாயை மூடிவைத்து 15 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.
எண்ணெய் ஓரங்களில் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சுவையான இறால் முருங்கைக்காய் கிரேவி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோதுமை மாவு - 2 கப்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
வெதுவெதுப்பான தண்ணீர்,
உப்பு - தேவைக்கு.
இறால் - 200 கிராம்,
சீஸ் - 100 கிராம்,
வெங்காயம் - 2,
பெங்களூர் தக்காளி - 1,
குடைமிளகாய் - 1/4 கப்,
கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சிக்கன் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை
கொத்தமல்லி, குடை மிளகாய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
கோதுமை மாவில், உப்பு, எண்ணெய், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊறவிட்டு, சப்பாத்திகளாக சுட்டு ஹாட்பாக்சில் போட்டு வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
இறால், உப்பு, மசாலாத்தூள்கள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கவும். தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்தவுடன் அதில் கெர்த்தமல்லித்தழை தூவி கிளறி இறக்கவும்.
சப்பாத்தியில் வெண்ணெய் தடவி இறால் கலவையை நடுவில் வைத்து அதன் மீது சீஸ் தூவி ரோல் செய்து மைக்ரோ ஓவனில் 2 நிமிடம் வைத்து இரண்டாக வெட்டி பரிமாறவும்.
சூப்பரான இறால் சீஸ் ரோல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.