என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
சியோமிக்கு போட்டியாக சாம்சங் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்
Byமாலை மலர்12 April 2018 7:49 AM GMT (Updated: 12 April 2018 7:49 AM GMT)
இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக சாம்சங் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
புதுடெல்லி:
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஜெ7 டியோ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் ஹெச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
இத்துடன் எக்சைனோஸ் 7 சீரிஸ் ஆக்டாகோர் பிராசஸர், ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம், 13 எம்பி + 5 எம்பி டூயல் பிரைமரி கேமரா செட்டப், 8 எம்பி செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.
அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் பிக்ஸ்பி அம்சம் வழங்கப்படலாம் என கூறப்பட்டு இருந்தது. எனினும் கேலக்ஸி ஜெ7 டியோ ஸ்மார்ட்போனில் பிக்ஸ்பி அம்சம் வழங்கப்படவில்லை. எனினும் புதிய ஸ்மார்ட்போனின் கைரேகை சென்சார் ஹோம் பட்டனில் பொருத்தப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஜெ7 டியோ சிறப்பம்சங்கள்:
- 5.5 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7 சீரிஸ் பிராசஸர்
- 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமராஸ எல்இடி ஃபிளாஷ், f/1.9
- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்ஏஹெச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஜெ7 டியோ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் கேலக்ஸி ஜெ7 டியோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் நாட்டின் அனைத்து ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X