search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க அரசு நிர்வாகம் மீண்டும் முடக்கம்- 8 லட்சம் ஊழியர்களுக்கு சிக்கல்
    X

    அமெரிக்க அரசு நிர்வாகம் மீண்டும் முடக்கம்- 8 லட்சம் ஊழியர்களுக்கு சிக்கல்

    அமெரிக்காவில் அரசின் செலவின மசோதாவுக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்காததால், அரசு நிர்வாகப் பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. #USShutdown
    வாஷிங்டன்:

    அமெரிக்க அரசின் செலவின மசோதாவுக்கும், அதிபர் டிரம்பின் கோரிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து எந்தவிதமான நிதி மசோதாவையும் நிறைவேற்றாமல் செனட் சபை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கி உள்ளது.

    நிர்வாக முடக்கம் காரணமாக 8 லட்சம் அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். அல்லது அவர்கள் ஊதியம் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


    மெக்சிகோ எல்லைப்பகுதியில் சுவர் எழுப்பும் தனது திட்டத்துக்காக டிரம்ப், 5 பில்லியன் தொகையை கோரியிருந்தார். ஆனால், டிரம்ப் கோரிக்கைக்கு செனட் சபையில் எதிர்ப்பு எழுந்தது. இதன் தொடர்ச்சியாக நிர்வாக முடக்கம் (ஷட்டவுன்) நிகழ்ந்துள்ளது.  நிர்வாக முடக்கம் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது தெரியவில்லை. அமெரிக்க அரசின் நிர்வாக முடக்கம் நீண்ட காலம் நீடிக்காது என நம்பிக்கை இருப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

    கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின் 4-வது முறையாக நிர்வாக முடக்கம் ஏற்பட்டு உள்ளது. அதிபர் டிரம்ப் பதவி ஏற்று 2-வது முறையாக நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இரு சபைகளும் மீண்டும் கூட உள்ளது. அப்போது நிர்வாக முடக்கத்தை சரி செய்வது  குறித்து விவாதிக்கப்படும். #USShutdown
    Next Story
    ×