என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரியாவின் மறுகட்டமைப்புக்காக சவுதி அரேபியா ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி
Byமாலை மலர்17 Aug 2018 2:03 PM GMT (Updated: 17 Aug 2018 2:03 PM GMT)
உள்நாட்டு போரால் சீர்குலைந்த சிரியாவை மறுகட்டமைப்பு செய்யவும், அங்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி செய்ய உள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. #Syria #SaudiArabia
ஜெட்டா:
வளைகுடா நாடான சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு யுத்தம் நடந்து வருகிறது. இதுதவிர, வடகிழக்கு பகுதிகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக நடந்த ஐ.எஸ்.க்கு எதிரான சண்டையில் அவர்கள் வசமிருந்த அனைத்து பகுதிகளையும் அமெரிக்கா தலைமையிலான படை கட்டுக்குள் கொண்டு வந்தது.
இந்நிலையில், அமெரிக்கா தலைமையிலான படையின் வசம் இருக்கும் ரக்கா நகரை சுற்றியுள்ள பல பகுதிகளை மறு கட்டமைப்பு செய்யவும், விவசாயம், கல்வி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவும் ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி செய்யப்போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
சிரிய அதிபர் ஆசாத்தை கடுமையாக எதிர்க்கும் சவுதி, அமெரிக்காவுடன் கைகோர்த்து நிற்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X