search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவை மிரட்ட நினைத்தால்.. : ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
    X

    அமெரிக்காவை மிரட்ட நினைத்தால்.. : ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

    அமெரிக்காவை மீண்டும் மிரட்ட நினைத்தால் வரலாறு முழுக்க சில நாடுகள் அடைந்த வேதனையை எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் அதிபரை டிரம்ப் எச்சரித்துள்ளார். #Trump #Rouhani
    வாஷிங்டன்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யக்கூடாது என அமெரிக்கா நேரடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கு பதிலடி தரும் வகையில் சமீபத்தில் கருத்து தெரிவித்த ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி, ‘ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யாவிட்டால் மேற்கத்திய நாடுகளுக்கு மத்திய கிழக்காசிய துணைக்கண்டத்தில் உள்ள இதர 15 நாடுகள் பெட்ரோல் ஏற்றுமதி செய்வதை ஈரான் தடுத்து நிறுத்தும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    உலக நாடுகளில் உள்ள ஈரான் நாட்டு தூதர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய அதிபர் ஹஸன் ரவுகானி, ஈரானுடன் போரிட அமெரிக்கா நினைத்தால் அது அனைத்து போர்களுக்கும் தாய்ப்போராக (மிக பிரமாண்டமானதாக) இருக்கும் என்று எச்சரித்தார்.

    சிங்கத்தின் வாலை பிடித்து விளையாடாதீர்கள், மிஸ்டர் டிரம்ப். இதன் விளைவு வருத்தத்தில்தான் போய் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



    இந்நிலையில், அமெரிக்காவை மீண்டும் மிரட்ட நினைத்தால் வரலாறு முழுக்க சில நாடுகள் அடைந்த வேதனையை எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் அதிபரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று எச்சரித்துள்ளார்.

    தனது டுவிட்டர் பக்கத்தில் ஈரான் அதிபர் ரவுகானிக்கு நேரடியாக பதில் அளித்துள்ள டிரம்ப், ‘வன்முறை மற்றும் மரணங்களை காட்டி நீங்கள் மிரட்டுவதை பொறுத்துக்கொள்ளும் நாடாக அமெரிக்கா இனி ஒருபோதும் இருக்காது. எச்சரிக்கையாக இருங்கள்’ என்று ஆங்கிலத்தின் பெரிய (கேப்பிட்டல்) எழுத்துகளில் பதிவிட்டுள்ளார். #Trump #Rouhani 
    Next Story
    ×