search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கவுதமாலா சென்றடைந்தார்
    X

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கவுதமாலா சென்றடைந்தார்

    துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் வெங்கையா நாயுடு முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக கவுதமாலா நாட்டுக்கு சென்றடைந்தார். #VenkaiahNaidu #VicePresidentofIndia #Guatemala

    கவுதமாலா சிட்டி:

    துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் வெங்கையா நாயுடு முதல்முறையாக கவுதமாலா, பனாமா, பெரு ஆகிய மூன்று வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    நேற்று டெல்லியில் இருந்த புறப்பட்ட அவர் ஸ்பெயின் வழியாக கவுதமாலா நாட்டுக்கு சென்றடைந்தார். அவருடன் மத்திய இணை மந்திரி ஜஷ்வந்த் சிங் பாபோர் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். இந்த பயணத்தின் போது கவுதமாலா ஜனாதிபதி ஜிம்மி மொரலெஸ், துணை ஜனாதிபதி ஜாபத் கேப்ரெரா மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் அல்வரோ அர்சு எஸ்கோபார் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். 



    அதைத்தொடர்ந்து 7-ம் தேதி பனாமா நாட்டுக்கு செல்கிறார். அங்கு பனாமா ஜனாதிபதி ஜுவான் கார்லோஸ் வரேலா, துணை ஜனாதிபதி மற்றும் வெளியுறவு மந்திரி இசபெல் செயிண்ட் மாலோ ஆகியோரை சந்திக்கிறார். அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    மூன்றாவது கட்ட பயணமாக பனாமாவில் இருந்து பெரு நாட்டுக்கு செல்கிறார். அங்கு பெரு நாட்டின் ஜனாதிபதி மார்டின் விஸ்காரா, துணை ஜனாதிபதி மெர்சிடஸ் அரோஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு 12-ம் தேதி இந்தியா திரும்புகிறார். #VenkaiahNaidu #VicePresidentofIndia #Guatemala
    Next Story
    ×