search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல் - போலீஸ் கமாண்டர் உள்பட 5 பேர் பலி
    X

    ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல் - போலீஸ் கமாண்டர் உள்பட 5 பேர் பலி

    ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் போலீஸ் கமாண்டர் உள்பட 5 பேர் பலியாகினர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
    காந்தகார்:

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காந்தகாரில் போலீஸ் கமாண்டராக இருந்தவர் ஜனான் மமா. இவர் இன்று காலை தனது பாதுகாவலர்களுடன் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரது வாகனத்தில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் ஜனான் மமா, அவரது பாதுகாவலர்கள் 3 பேர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என மொத்தம் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    Next Story
    ×