என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை பிரதமர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: அதிபர் சிறிசேனா ஆதரிப்பார் - ராஜபக்சே நம்பிக்கை
Byமாலை மலர்2 April 2018 12:23 AM GMT (Updated: 2 April 2018 12:23 AM GMT)
அதிபர் சிறிசேனா இலங்கை பிரதமர் ரனில் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்பார் என ராஜபக்சே கொழும்பு நகரில் நம்பிக்கை தெரிவித்தார்.
கொழும்பு:
இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி கண்டது. அவர் பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா கோரியும் அவர் மறுத்து விட்டார். ஆனாலும், புத்த மதத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ரனிலிடம் இருந்து சட்டம்- ஒழுங்கு மந்திரி பதவியை அதிபர் சிறிசேனா பறித்தார்.
இப்போது ரனில் மீது ராஜபக்சே கட்சி (இலங்கை மக்கள் முன்னணி), அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது. இந்த தீர்மானத்தை சபாநாயகர் கரு ஜெயசூரியாவிடம் அந்தக் கட்சி அளித்து விட்டது. அதில் அவர் மீது நிதி மோசடி செய்ததாகவும், இனக்கலவரத்தை அடக்கத்தவறி விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
இந்த தீர்மானம் 4-ந் தேதி (நாளை மறுதினம்) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதுபற்றி ராஜபக்சே, கொழும்பு நகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் அதிபர் சிறிசேனா, ரனில் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.
அப்போது அவர் கூறும்போது, “தனது இலங்கை சுதந்திரா கட்சி எம்.பி.க்களின் ஆதரவை பெற்றுத்தந்து, ரனில் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வெற்றி அடையச்செய்வதை அதிபர் சிறிசேனா உறுதி செய்ய வேண்டும்” என குறிப்பிட்டார்.நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து, இலங்கை சுதந்திரா கட்சி முடிவு எடுத்து இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி கண்டது. அவர் பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா கோரியும் அவர் மறுத்து விட்டார். ஆனாலும், புத்த மதத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ரனிலிடம் இருந்து சட்டம்- ஒழுங்கு மந்திரி பதவியை அதிபர் சிறிசேனா பறித்தார்.
இப்போது ரனில் மீது ராஜபக்சே கட்சி (இலங்கை மக்கள் முன்னணி), அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது. இந்த தீர்மானத்தை சபாநாயகர் கரு ஜெயசூரியாவிடம் அந்தக் கட்சி அளித்து விட்டது. அதில் அவர் மீது நிதி மோசடி செய்ததாகவும், இனக்கலவரத்தை அடக்கத்தவறி விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
இந்த தீர்மானம் 4-ந் தேதி (நாளை மறுதினம்) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதுபற்றி ராஜபக்சே, கொழும்பு நகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் அதிபர் சிறிசேனா, ரனில் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.
அப்போது அவர் கூறும்போது, “தனது இலங்கை சுதந்திரா கட்சி எம்.பி.க்களின் ஆதரவை பெற்றுத்தந்து, ரனில் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வெற்றி அடையச்செய்வதை அதிபர் சிறிசேனா உறுதி செய்ய வேண்டும்” என குறிப்பிட்டார்.நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து, இலங்கை சுதந்திரா கட்சி முடிவு எடுத்து இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X