என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சர்ச்சைக்குரிய பகுதியில் கப்பல் பயணம்: அமெரிக்காவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை
Byமாலை மலர்21 Jan 2018 1:25 AM GMT (Updated: 21 Jan 2018 1:25 AM GMT)
சீன கடல் எல்லைக்குள் எங்கள் அனுமதி இல்லாமல், அமெரிக்க போர்க்கப்பல் சென்றது, சீனாவின் இறையாண்மையை மீறிய செயல் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது
பீஜிங்:
தெற்கு சீன கடலை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால், வேறு சில நாடுகளும் அதற்கு உரிமை கொண்டாடுவதால், அது சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில், தெற்கு சீன கடலில் உள்ள குவாங்யான் என்ற மணல் திட்டு பகுதி அருகே அமெரிக்க போர்க்கப்பல் கடந்து சென்றது.
இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் லு காங் கூறுகையில், “சீன கடல் எல்லைக்குள் எங்கள் அனுமதி இல்லாமல், அமெரிக்க போர்க்கப்பல் சென்றது, சீனாவின் இறையாண்மையை மீறிய செயல். சீன கப்பல்களுக்கும், ஊழியர்களுக்கும் கூட அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
இது எங்களுக்கு அதிருப்தி அளிக்கிறது. இதேநிலை நீடித்தால், இறையாண்மையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருக்கும்” என்றார்.
தெற்கு சீன கடலை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால், வேறு சில நாடுகளும் அதற்கு உரிமை கொண்டாடுவதால், அது சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில், தெற்கு சீன கடலில் உள்ள குவாங்யான் என்ற மணல் திட்டு பகுதி அருகே அமெரிக்க போர்க்கப்பல் கடந்து சென்றது.
இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் லு காங் கூறுகையில், “சீன கடல் எல்லைக்குள் எங்கள் அனுமதி இல்லாமல், அமெரிக்க போர்க்கப்பல் சென்றது, சீனாவின் இறையாண்மையை மீறிய செயல். சீன கப்பல்களுக்கும், ஊழியர்களுக்கும் கூட அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
இது எங்களுக்கு அதிருப்தி அளிக்கிறது. இதேநிலை நீடித்தால், இறையாண்மையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருக்கும்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X