என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்கா: தீப்பற்றி எரியும் காரில் இந்திய வம்சாவளி பெண்ணை கருகவிட்டு டிரைவர் தப்பியோட்டம்
Byமாலை மலர்15 Oct 2017 10:54 AM GMT (Updated: 15 Oct 2017 10:54 AM GMT)
தீப்பற்றி எரியும் காரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் பெண்ணை கருகவிட்டு டிரைவர் தப்பியோடிய சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள புரூக்ளின் - குயின்ஸ் எக்ஸ்பிரஸ் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்லின் கிரிவால் (25), பயணம் செய்து கொண்டிருந்தார். சையத் அகமது(23) என்ற டிரைவர் காரை ஓட்டிச் சென்றார்.
அப்போது திடீரென காரில் இருந்து தீப்பொறி கிளம்பியது. சிறிது நேரத்தில் கார் பற்றி எரிய ஆரம்பித்தது. இதில் ஹர்லின் சிக்கிக் கொண்டார். கார் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆனால், தீ பரவிய சிறிது நேரத்தில் அகமது காரிலிருந்து கீழே குதித்துவிட்டார். அதில் அவருக்கு சிறிது தீக்காயம் ஏற்பட்டது. அதன்பின் அவர் வாடகை காரில் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து வந்த போலீசார் தீப்பற்றிய காரை அணைத்தனர். காரில் கருகி கிடந்த ஹர்லின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள புரூக்ளின் - குயின்ஸ் எக்ஸ்பிரஸ் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்லின் கிரிவால் (25), பயணம் செய்து கொண்டிருந்தார். சையத் அகமது(23) என்ற டிரைவர் காரை ஓட்டிச் சென்றார்.
அப்போது திடீரென காரில் இருந்து தீப்பொறி கிளம்பியது. சிறிது நேரத்தில் கார் பற்றி எரிய ஆரம்பித்தது. இதில் ஹர்லின் சிக்கிக் கொண்டார். கார் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆனால், தீ பரவிய சிறிது நேரத்தில் அகமது காரிலிருந்து கீழே குதித்துவிட்டார். அதில் அவருக்கு சிறிது தீக்காயம் ஏற்பட்டது. அதன்பின் அவர் வாடகை காரில் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து வந்த போலீசார் தீப்பற்றிய காரை அணைத்தனர். காரில் கருகி கிடந்த ஹர்லின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X