என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டிரைவர் தப்பியோட்டம்"
- மேப்பிலியூர் கிராமத்தில் இருந்து குழாங்கற்கள் கடத்தபடுவதாக பல்வேறு புகார்கள் வந்தது.
- சந்தேகமடைந்த ஊழியர்கள் லாரியில் சோதனையிட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா மேப்பிலியூர் கிராமத்தில் இருந்து குழாங்கற்கள் கடத்தபடுவதாக பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து விழுப்புரம் உதவி புவியிலாளர் மற்றும் சுரங்கத் துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே ஒரு லாரி வந்தது. அதனை நிறுத்தி சோதனையிட்ட போது, லாரியின் டிரைவர் தப்பியோடினார். இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் லாரியில் சோதனையிட்டனர். இதில் லாரியில் குழாங்கற்கள் இருந்ததை கண்டறிந்தனர்.தொடர்ந்து இது குறித்து புவியிலாளர் துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர். மேலும், லாரியின் உரிமையாளர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இது போல கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என புவியிலாளர் மற்றும் சுரங்கத் துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்