என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடகொரிய விவகாரம்: ‘நிலைமையை மோசமாக்கி விட வேண்டாம்’ என டிரம்புக்கு சீன அதிபர் அறிவுறுத்தல்
Byமாலை மலர்12 Aug 2017 10:33 PM GMT (Updated: 12 Aug 2017 10:33 PM GMT)
வடகொரிய விவகாரத்தில் நிலைமையை மோசமாக்கி விட வேண்டாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தொலைபேசி மூலம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீஜிங்:
வடகொரியாவும், அமெரிக்காவும் ஒன்றுக்கொன்று ஆத்திரம் ஏற்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தி மோதலில் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள குவாம் தீவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்போவதாக கூறி அதற்கான திட்டத்தை வடகொரியா வெளியிட்டது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா பாதையை மாற்றிக்கொள்ளா விட்டால், அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயாராகி விட்டதாகவும், ஆயுதங்களும், தளவாடங்களும் லோடு ஏற்றியாகி விட்டதாகவும் நேற்று முன்தினம் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்றினார்.
இந்த நிலையில் வடகொரியாவின் ஆதரவு நாடான சீனாவின் அதிபர் ஜின்பிங், இரு நாடுகளையும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
நிலைமையை மேலும் மோசமாக்கும் வார்த்தைகளையும், செயல்களையும் அமெரிக்காவும், வடகொரியாவும் தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக டிரம்பை ஜின்பிங் தொலைபேசியில் அழைத்துப் பேசியதாக சீன அரசு ஊடகம் கூறுகிறது.
மேலும், சீனாவும், அமெரிக்காவும் கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்கள் இன்றி, அமைதி ஏற்படுத்துவதில் பொது நலன்களை பகிர்ந்து கொள்வதாகவும் டிரம்பிடம் ஜின்பிங் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதே போன்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், டிரம்பும், ஜின்பிங்கும் நெருங்கிய உறவை பராமரிப்பதாகவும், அது வடகொரிய பிரச்சினையில் அமைதித்தீர்வு ஏற்பட வழிநடத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வடகொரியாவும், அமெரிக்காவும் ஒன்றுக்கொன்று ஆத்திரம் ஏற்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தி மோதலில் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள குவாம் தீவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்போவதாக கூறி அதற்கான திட்டத்தை வடகொரியா வெளியிட்டது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா பாதையை மாற்றிக்கொள்ளா விட்டால், அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயாராகி விட்டதாகவும், ஆயுதங்களும், தளவாடங்களும் லோடு ஏற்றியாகி விட்டதாகவும் நேற்று முன்தினம் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்றினார்.
இந்த நிலையில் வடகொரியாவின் ஆதரவு நாடான சீனாவின் அதிபர் ஜின்பிங், இரு நாடுகளையும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
நிலைமையை மேலும் மோசமாக்கும் வார்த்தைகளையும், செயல்களையும் அமெரிக்காவும், வடகொரியாவும் தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக டிரம்பை ஜின்பிங் தொலைபேசியில் அழைத்துப் பேசியதாக சீன அரசு ஊடகம் கூறுகிறது.
மேலும், சீனாவும், அமெரிக்காவும் கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்கள் இன்றி, அமைதி ஏற்படுத்துவதில் பொது நலன்களை பகிர்ந்து கொள்வதாகவும் டிரம்பிடம் ஜின்பிங் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதே போன்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், டிரம்பும், ஜின்பிங்கும் நெருங்கிய உறவை பராமரிப்பதாகவும், அது வடகொரிய பிரச்சினையில் அமைதித்தீர்வு ஏற்பட வழிநடத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X