என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செல்பி எடுக்கும் ஆர்வத்தில் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள கலைப் பொருட்களை உடைத்த பெண்
Byமாலை மலர்17 July 2017 12:38 PM GMT (Updated: 17 July 2017 12:38 PM GMT)
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நடை பெற்ற ஓவிய கண்காட்சியில் பெண் ஒருவர் செல்பி எடுக்கும் போது சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கலைப் பொருட்களை தெரியாமல் உடைத்து வீணாக்கினார்
கலிபோர்னியா:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 14-வது கலைப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல பார்வையாளர்கள் கலந்து கொண்டு அங்குள்ள ஓவியங்கள் மற்றும் கலைப்பொருட்கள் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதே போல் அங்கு வரிசையாக வைக்கப்பட்டிருந்த கலைப் பொருட்கள் முன் நின்று பெண் ஒருவர் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக ஒரு பொருளை தள்ளி விட்டதில் வரிசையாக இருந்த அனைத்து கலைப் படைப்புகளும் கீழே விழுந்தன. அதில் மூன்று படைப்புகள் முழுமையாக உடைந்து விட்டதாக அக்கண்காட்சியின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் மதிப்பு சுமார் 2 இலட்சம் டாலர்கள் (சுமார் ஒரு கோடி ரூபாய்) என் தெரிவித்துள்ளனர்.
செல்பி எடுத்ததால் 2 இலட்சம் டாலர்கள் இழப்பு ஏற்படுத்தியதை எண்ணி அப்பெண் மிகவும் சோகத்தில் உள்ளார். இது போன்று பல முறை செல்பி எடுக்கும் போது மக்கள் தெரியாமல் பொது இடங்களில் உள்ள பொருட்களுக்கு சேதம் விளைவிக்கின்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 14-வது கலைப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல பார்வையாளர்கள் கலந்து கொண்டு அங்குள்ள ஓவியங்கள் மற்றும் கலைப்பொருட்கள் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதே போல் அங்கு வரிசையாக வைக்கப்பட்டிருந்த கலைப் பொருட்கள் முன் நின்று பெண் ஒருவர் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக ஒரு பொருளை தள்ளி விட்டதில் வரிசையாக இருந்த அனைத்து கலைப் படைப்புகளும் கீழே விழுந்தன. அதில் மூன்று படைப்புகள் முழுமையாக உடைந்து விட்டதாக அக்கண்காட்சியின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் மதிப்பு சுமார் 2 இலட்சம் டாலர்கள் (சுமார் ஒரு கோடி ரூபாய்) என் தெரிவித்துள்ளனர்.
செல்பி எடுத்ததால் 2 இலட்சம் டாலர்கள் இழப்பு ஏற்படுத்தியதை எண்ணி அப்பெண் மிகவும் சோகத்தில் உள்ளார். இது போன்று பல முறை செல்பி எடுக்கும் போது மக்கள் தெரியாமல் பொது இடங்களில் உள்ள பொருட்களுக்கு சேதம் விளைவிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X