என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
23 வயது இளைஞரை 3 பெண்கள் சேர்ந்து 3 நாட்கள் கற்பழித்த கொடூரம்
Byமாலை மலர்30 May 2017 12:00 AM GMT (Updated: 30 May 2017 12:29 AM GMT)
தென் ஆப்பிரிக்காவில் 23 வயது இளைஞரை 3 பெண்கள் சேர்ந்து 3 நாட்கள் பலமுறை கற்பழித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ப்ரீடோரியா:
தென் ஆப்பிரிக்காவில் உள்ள ப்ரீடோரியா நகரத்தின் கிழக்கு பகுதியில் டாக்சி ஓட்டுநராக சென்ற இளைஞரை, 3 பெண்கள் கடத்தி அவருக்கு போதை மருந்துகள் கொடுத்து கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 வயதான ஓர்டியல் என்ற இளைஞரை கடத்திச் சென்ற மூன்று பெண்கள், ஓர்டியலை தொடர்ந்து 3 நாட்கள் கொடூரமாக கற்பழித்துள்ளனர். அதுவும் ஒரே நாளில் பலமுறை கற்பழித்துள்ளது மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று மயக்க மருந்து மூலம் கடத்திச் செல்லப்பட்ட ஓர்டியல், கண்விழித்த போது ஏதோ ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் மயக்க நிலையில் இருந்து தெளிந்த ஓர்டியலை 3 பேரும், 3 நாட்கள் பலமுறை கற்பழித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார், சம்பந்தப்பட்ட 3 பேரை தேடி வருகின்றனர். குற்றவாளிகள் 3 பேருக்கும் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்று தென்ஆப்பிரிக்க போலீஸ் அதிகாரி கோலெட் வெய்ல்பேச் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவில் ஆண், பெண் என கற்பழிப்பு சம்பவங்கள் பெருவாரியான அளவுகளில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு வருடத்தில் சுமார் 5 லட்சம் பேர் வரை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள ப்ரீடோரியா நகரத்தின் கிழக்கு பகுதியில் டாக்சி ஓட்டுநராக சென்ற இளைஞரை, 3 பெண்கள் கடத்தி அவருக்கு போதை மருந்துகள் கொடுத்து கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 வயதான ஓர்டியல் என்ற இளைஞரை கடத்திச் சென்ற மூன்று பெண்கள், ஓர்டியலை தொடர்ந்து 3 நாட்கள் கொடூரமாக கற்பழித்துள்ளனர். அதுவும் ஒரே நாளில் பலமுறை கற்பழித்துள்ளது மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று மயக்க மருந்து மூலம் கடத்திச் செல்லப்பட்ட ஓர்டியல், கண்விழித்த போது ஏதோ ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் மயக்க நிலையில் இருந்து தெளிந்த ஓர்டியலை 3 பேரும், 3 நாட்கள் பலமுறை கற்பழித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார், சம்பந்தப்பட்ட 3 பேரை தேடி வருகின்றனர். குற்றவாளிகள் 3 பேருக்கும் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்று தென்ஆப்பிரிக்க போலீஸ் அதிகாரி கோலெட் வெய்ல்பேச் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவில் ஆண், பெண் என கற்பழிப்பு சம்பவங்கள் பெருவாரியான அளவுகளில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு வருடத்தில் சுமார் 5 லட்சம் பேர் வரை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X