என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானில் முழுவதும் பெண்களுக்காக நடத்தப்படும் முதல் சேனல்
Byமாலை மலர்20 May 2017 11:56 PM GMT (Updated: 21 May 2017 12:02 AM GMT)
ஆப்கானிஸ்தான் நாட்டில் முழுவதும் பெண்களால் நடத்தப்படும் பெண்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் கொண்ட சேனல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
காபூல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் முழுவதும் பெண்களால் நடத்தப்படும் பெண்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் கொண்ட சேனல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 2001-ம் ஆண்டு வரை தாலிபான்களில் ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஆப்கானிஸ்தான் நாட்டில், அப்போது பெண் குழந்தைகள் கல்வி கற்கவும், பெண்கள் வேலைக்கு செல்லவும் தடை இருந்தது. பின்னர் ஜனநாயகப் பாதைக்கு திரும்பிய அந்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பெண்கள் தங்களது உரிமைகளை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டில் முற்றிலும் பெண்களுக்காகவே நடத்தப்படும் தொலைக்காட்சி சேனல் ஒன்று உதயமாகிறது. ஸான் டி.வி. என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள். ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை தொலைக்காட்சிகளில் பெண்கள் பணியாற்றுவதற்கு பண்பாட்டு முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. அவற்றை உடைப்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
”முழுவதும் பெண்களால் நடத்தப்படும் இந்த தொலைக்காட்சி தொடங்கியிருப்பதில் மகிழ்ச்சி, இந்த சேனல் பெண்களுக்கான உரிமைகளை பறை சாற்றி அவர்கள் இழந்த உரிமைகளை மீண்டும் பெற்று தரும்” என 20 வயது நிகழ்ச்சி தயாரிப்பாளர் காதிரா அஹமதி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் முழுவதும் பெண்களால் நடத்தப்படும் பெண்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் கொண்ட சேனல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 2001-ம் ஆண்டு வரை தாலிபான்களில் ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஆப்கானிஸ்தான் நாட்டில், அப்போது பெண் குழந்தைகள் கல்வி கற்கவும், பெண்கள் வேலைக்கு செல்லவும் தடை இருந்தது. பின்னர் ஜனநாயகப் பாதைக்கு திரும்பிய அந்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பெண்கள் தங்களது உரிமைகளை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டில் முற்றிலும் பெண்களுக்காகவே நடத்தப்படும் தொலைக்காட்சி சேனல் ஒன்று உதயமாகிறது. ஸான் டி.வி. என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள். ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை தொலைக்காட்சிகளில் பெண்கள் பணியாற்றுவதற்கு பண்பாட்டு முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. அவற்றை உடைப்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
”முழுவதும் பெண்களால் நடத்தப்படும் இந்த தொலைக்காட்சி தொடங்கியிருப்பதில் மகிழ்ச்சி, இந்த சேனல் பெண்களுக்கான உரிமைகளை பறை சாற்றி அவர்கள் இழந்த உரிமைகளை மீண்டும் பெற்று தரும்” என 20 வயது நிகழ்ச்சி தயாரிப்பாளர் காதிரா அஹமதி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X