search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    திருப்பூரில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

    திருப்பூரில் தந்தை திட்டியதால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையம் அம்மையப்பர் நகரை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி செல்வ ராணி. இருவரும் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களது மகன் நளின் (16). இவர் அனுப்பர் பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டின் முன்பு நளின் தண்ணீர் கொட்டியதாக தெரிகிறது. இதனை அவரது தந்தை கண்டித்தார். இதனால் மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று வழக்கம்போல் தந்தையும், தாயும் வேலைக்கு சென்றுவிட்டனர். பின்னர் மாலை வீடு திரும்பி வந்தபோது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நளின் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சல் போட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மாணவனை மீட்டனர். ஆனால் அவர் இறந்து விட்டார்.

    இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×