search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் அ.தி.மு.க. அலை வீசுகிறது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
    X

    தமிழகத்தில் அ.தி.மு.க. அலை வீசுகிறது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

    தமிழகத்தில் அ.தி.மு.க. வின் அலை வீசுகிறது என்றும், மக்கள் எழுச்சியுடன் வாக்களித்து வருவதாகவும் பால்வளத்துறை அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். #ministerrajendrabalaji #admk #TNElections2019

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை பதிவு செய்தார்.

    அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு தமிழக மக்கள் அங்கீகாரம் கொடுக்கும் வகையில் மக்கள் வாக்களிக்க வாக்களித்து வருகின்றனர். சாத்தூர் தொகுதி உள்பட அனைத்து இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெறுவார்கள்.

    நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அலை வீசுகிறது. மக்கள் எழுச்சியுடன் வாக்களித்து வருகிறார்கள.

    தமிழகத்தில் பணப் புழக்கம் அதிகமாக உள்ளது என்ற கேள்விக்கு பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். தேர்தலுக்காக மக்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

    வருமானவரித்துறை, ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு ஆளும் கட்சியினர் மீது எதிர்க்கட்சிகள் சொல்லுவது புதிதல்ல. அ. ம.மு.க., தி.மு.க. கட்சிகள் மீது மக்கள் எதிர்ப்பு உள்ளது. தினகரன் நாட்டை கொள்ளையடிப்பதற்காகவே கூட்டத்தை கூட்டியுள்ளார்.

    சாத்தூர் அ.ம.மு.க. வேட்பாளர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 43 லட்சத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது. கொள்ளையடிக்கவே இருவரும் ஆட்சிக்கு வர துடிக்கின்றனர்.

    ஆட்சியை மத்தியிலும் மாநிலத்திலும் கவிழ்ப்பேன் என திரிகிறார். பிரசாரத்தில் ஸ்டாலின் குணாதிசியம் தெரிந்தது. மக்கள் நலனில் அக்கறை இல்லை. மீண்டும் மோடி பிரதமராக வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministerrajendrabalaji #admk #TNElections2019

    Next Story
    ×