என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம்- டிடிவி தினகரன் இன்று மாலை தொடங்குகிறார்
Byமாலை மலர்2 Feb 2019 5:12 AM GMT (Updated: 2 Feb 2019 5:12 AM GMT)
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று மாலை மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை திருச்சியில் தொடங்குகிறார். #AMMK #TTVDhinakaran
திருச்சி:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று முதல் 4-ந்தேதி வரை 3 நாட்கள் திருச்சி மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். இதற்காக நேற்று இரவு திருச்சி வந்தார்.
இன்று மாலை 4 மணிக்கு சுற்றுப்பயணத்தை தொடங்கும் டி.டி.வி. தினகரன் குண்டூர் எம்.ஐ.இ.டி. காலேஜ் அருகில் பேசுகிறார். தொடர்ந்து நவல்பட்டு பர்மா காலனி, சோழமாதேவி, திருவெறும்பூர் தொகுதியில் திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகம், துவாக்குடி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பேசுகிறார்.
தொடர்ந்து காட்டூர் பாப்பாக்குறிச்சி, ராணுவ காலனி, அம்பிகாபுரம் பகுதிகளில் பேசுகிறார். நாளை 3-ம் தேதி ஸ்ரீரங்கம் தொகுதி நவலூர் குட்டப்பட்டு, இனாம்குளத்தூர் ஆகிய இடங்களில் மாலை 5 மற்றும் 6 மணிக்கு பேசுகிறார். தொடர்ந்து மணப்பாறை தொகுதிக்குட்பட்ட மணப்பாறை நகரத்தில் இரவு 7 மணிக்கும், வையம்பட்டி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி ஆகிய இடங்களிலும் பேசுகிறார்.
4-ந் தேதி மண்ணச்சநல்லூர் தொகுதி சமயபுரம் நால் ரோட்டில் 4 மணிக்கு பேசுகிறார். தொடர்ந்து மண்ணச்ச நல்லூர் திருவெள்ளறை, புலிவலம், துறையூர் தொகுதி பகுதியில் மாலை 7 மணிக்கு துறையூரிலும், 7.30 மணிக்கு கண்ணனூரிலும் பேசுகிறார். இரவு 8 மணிக்கு முசிறி தொகுதி தாத்தையங்கார் பேட்டையிலும், 8.30 மணிக்கு முசிறியிலும் பேசுகிறார்.
5-ந் தேதி திருச்சியில் இருந்து டி.டி.வி. தினகரன் சென்னை புறப்பட்டு செல்கிறார். #AMMK #TTVDhinakaran
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று முதல் 4-ந்தேதி வரை 3 நாட்கள் திருச்சி மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். இதற்காக நேற்று இரவு திருச்சி வந்தார்.
இன்று மாலை 4 மணிக்கு சுற்றுப்பயணத்தை தொடங்கும் டி.டி.வி. தினகரன் குண்டூர் எம்.ஐ.இ.டி. காலேஜ் அருகில் பேசுகிறார். தொடர்ந்து நவல்பட்டு பர்மா காலனி, சோழமாதேவி, திருவெறும்பூர் தொகுதியில் திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகம், துவாக்குடி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பேசுகிறார்.
தொடர்ந்து காட்டூர் பாப்பாக்குறிச்சி, ராணுவ காலனி, அம்பிகாபுரம் பகுதிகளில் பேசுகிறார். நாளை 3-ம் தேதி ஸ்ரீரங்கம் தொகுதி நவலூர் குட்டப்பட்டு, இனாம்குளத்தூர் ஆகிய இடங்களில் மாலை 5 மற்றும் 6 மணிக்கு பேசுகிறார். தொடர்ந்து மணப்பாறை தொகுதிக்குட்பட்ட மணப்பாறை நகரத்தில் இரவு 7 மணிக்கும், வையம்பட்டி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி ஆகிய இடங்களிலும் பேசுகிறார்.
4-ந் தேதி மண்ணச்சநல்லூர் தொகுதி சமயபுரம் நால் ரோட்டில் 4 மணிக்கு பேசுகிறார். தொடர்ந்து மண்ணச்ச நல்லூர் திருவெள்ளறை, புலிவலம், துறையூர் தொகுதி பகுதியில் மாலை 7 மணிக்கு துறையூரிலும், 7.30 மணிக்கு கண்ணனூரிலும் பேசுகிறார். இரவு 8 மணிக்கு முசிறி தொகுதி தாத்தையங்கார் பேட்டையிலும், 8.30 மணிக்கு முசிறியிலும் பேசுகிறார்.
5-ந் தேதி திருச்சியில் இருந்து டி.டி.வி. தினகரன் சென்னை புறப்பட்டு செல்கிறார். #AMMK #TTVDhinakaran
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X