என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொங்கல் பரிசு பணத்தை தராததால் பெண் வெட்டிக் கொலை
Byமாலை மலர்12 Jan 2019 4:27 AM GMT (Updated: 12 Jan 2019 4:27 AM GMT)
மதுரை அருகே பொங்கல் பரிசு பணத்தை தராததால் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் போலீசில் சரண் அடைந்தார்.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையைச் சேர்ந்தவர் ராமர் (வயது 70), இவரது மனைவி ராசாத்தி (65).
இவர்கள் இருவருக்கம் இடையே குடும்ப பிரச்சனை தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பணத்தை ராசாத்தி நேற்று வாங்கி வந்தார்.
அதில் பாதியை தனக்கு தர வேண்டும் என்று ராமர் கேட்டார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இன்று காலை எழுந்ததும் மீண்டும் அதே பிரச்சனை வெடித்தது. இதில் ஆத்திரம் அடைந்த ராமர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, மனைவியை வெட்டினார். பலத்த காயம் அடைந்த ராசாத்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
ஆத்திரத்தில் கொலை செய்து விட்டோமே என்று ராமர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் எழுமலை போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார்.
அப்போது மனைவியை வெட்டிக் கொலை செய்ததை தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ராசாத்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #PongalGift
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையைச் சேர்ந்தவர் ராமர் (வயது 70), இவரது மனைவி ராசாத்தி (65).
இவர்கள் இருவருக்கம் இடையே குடும்ப பிரச்சனை தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பணத்தை ராசாத்தி நேற்று வாங்கி வந்தார்.
அதில் பாதியை தனக்கு தர வேண்டும் என்று ராமர் கேட்டார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இன்று காலை எழுந்ததும் மீண்டும் அதே பிரச்சனை வெடித்தது. இதில் ஆத்திரம் அடைந்த ராமர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, மனைவியை வெட்டினார். பலத்த காயம் அடைந்த ராசாத்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
ஆத்திரத்தில் கொலை செய்து விட்டோமே என்று ராமர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் எழுமலை போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார்.
அப்போது மனைவியை வெட்டிக் கொலை செய்ததை தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ராசாத்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #PongalGift
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X