என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வானதி சீனிவாசன் கணவர் அமலாக்கத்துறை வக்கீலாக நியமனம்
Byமாலை மலர்6 Dec 2018 10:48 AM GMT (Updated: 6 Dec 2018 10:48 AM GMT)
சென்னை ஐகோர்ட்டுக்கு அமலாக்கத்துறையின் வக்கீலாக தமிழக பா.ஜனதா பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனின் கணவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #BJP #VanathiSrinivasan
சென்னை:
தமிழக பா.ஜனதா பொதுச் செயலாளர் வக்கீல் வானதி. இவரது கணவர் சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் அமலாக்கத்துறைக்கு வக்கீல்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
இதில் சென்னை ஐகோர்ட்டுக்கு அமலாக்கத்துறையின் வக்கீலாக சீனிவாசனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவருடன் ஹேமலதா என்ற வக்கீலும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சீனிவாசன் ஐகோர்ட்டில் கடந்த 25 வருடங்களாக பணியாற்றி வருகிறார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தின் மாநில செயலாளராக பணியாற்றினார். பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷனிடம் சுப்ரீம் கோர்ட்டில் ஜூனியராக 3 ஆண்டுகள் பணியாற்றினார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தேசிய இளைஞர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மோடி பிரதமராக வந்ததும் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். மத்திய அரசின் நிர்வாக தீர்ப்பாயத்தின் தலைமை வக்கீலாகவும் பணியாற்றி வருகிறார். #BJP #VanathiSrinivasan
தமிழக பா.ஜனதா பொதுச் செயலாளர் வக்கீல் வானதி. இவரது கணவர் சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் அமலாக்கத்துறைக்கு வக்கீல்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
இதில் சென்னை ஐகோர்ட்டுக்கு அமலாக்கத்துறையின் வக்கீலாக சீனிவாசனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவருடன் ஹேமலதா என்ற வக்கீலும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சீனிவாசன் ஐகோர்ட்டில் கடந்த 25 வருடங்களாக பணியாற்றி வருகிறார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தின் மாநில செயலாளராக பணியாற்றினார். பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷனிடம் சுப்ரீம் கோர்ட்டில் ஜூனியராக 3 ஆண்டுகள் பணியாற்றினார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தேசிய இளைஞர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மோடி பிரதமராக வந்ததும் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். மத்திய அரசின் நிர்வாக தீர்ப்பாயத்தின் தலைமை வக்கீலாகவும் பணியாற்றி வருகிறார். #BJP #VanathiSrinivasan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X