search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "appoint"

    • போலீஸ்நிலையப் பணிகளை கவனிக்க உதவி ஆய்வாளர் ஒருவர், தேவை படுகிறது.
    • பொதுமக்கள் புகார் மனு கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட எதிரியை அழைத்து வரக் கூட போலீசார் இருப்பது இல்லை.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸ் நிலையம் இடைப்பாடி சாலையில், பாறையூர், பள்ளிபாளையம் சாலையில் குப்பாண்டபாளையம், சேலம் சாலையில் 4 வழிச்சாலை, மேற்கில் பவானி காவிரி ஆற்றின் பாலம் ஆகியவை எல்லையாக உள்ளது.

    தொழில் நிறுவனங்கள்

    மிகப்பெரிய பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள்,

    500-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறை கள், இதர தொழில் நிறுவனங்கள், அரசு, மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், சேலம்-கோவை புறவழிச்சாலையில் இரவு பகலாக செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் என குமாரபாளையம் போலீஸ் நிலையத்தின் எல்லை விரிவடைந்து கிடக்கிறது.

    குமாரபாளையம் நகராட்சி பகுதி தவிர தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம், பல்லக்காபாளையம் ஆகிய 3 ஊராட்சி பகுதிகளும் உள்ளன. நகராட்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையும், 3 ஊராட்சிகளில் சேர்ந்து மேலும் ஒரு லட்சம் மக்கள் தொகை என சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதியாகவும் , குமாரபாளையம் போலீஸ் நிலையம் அதிகார வரம்புக்குள் இருந்து வருகின்றன.

    கூடுதல் போலீஸ்

    இந்நிலையில்,போலீஸ் நிலையத்தில் நுழைவு வாயில் காவலர், எழுத்தர், நீதிமன்றத்துக்கான தலைமைக்காவலர், ஆய்வாளரின் வாகன டிரைவர், புறவழிச்சாலையில் இரு போலீசார், போலீஸ்நிலையப் பணிகளை கவனிக்க உதவி ஆய்வாளர் ஒருவர், தேவை படுகிறது. சமீப காலமாக அத்தியாவசிய பணிகளில் போலீசார் இல்லாமல் எழுத்தர், தன் பணியுடன் போலீஸ்(சென்ட்ரி) பணியை கவனிக்கிறார். அதிக பட்சம் 4 அல்லது 5 பேர் மட்டுமே இருக்க வேண்டிய நிலையில் 2 போலீசார் மட்டுமே பணியில் இருக்கக்கூடிய நிலை இருந்து வருகிறது.

    பொதுமக்கள் அதிருப்தி

    பொதுமக்கள் புகார் மனு கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட எதிரியை அழைத்து வரக் கூட போலீசார் இருப்பது இல்லை. புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகும் நிலை உள்ளது. போலீஸ் நிலையத்தில் இருக்கும் போலீசார் எண்ணிக்கை பார்த்தால் சுமார் 40 பேர் இருப்பதாகக்கூறப்படு கிறது. ஆனால் அதிக பட்சம் 5 பேருக்கு மேல் இருப்பது இல்லை.

    ஆகவே போதிய அளவில் புதிய போலீசாரை நியமித்து சட்ட ஒழுங்கு குற்றங்களை தடுக்கவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை, வழிகாட்டுதல் அமைக்க ஆலோசனை மையம் ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
    • பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி புத்தகம் தயாரிக்கப்பட்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிக்கு ஒருவர் வழிகாட்டி ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சேலம்:

    தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை, வழிகாட்டுதல் அமைக்க ஆலோசனை மையம் ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதில், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி புத்தகம் தயாரிக்கப்பட்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிக்கு ஒருவர் வழிகாட்டி ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    9, 10 -ம் வகுப்புகளுக்கு...

    தற்போது, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டி ஆசிரியராக செயல்பட, பள்ளிக்கு ஒரு பட்டதாரி ஆசிரியரை தேர்வு செய்து அறிக்கை அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 9-ம் வகுப்பு மொழிப்பாட ஆசிரியர் அல்லது கணினி ஆசிரியருக்கு முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி, ஆய்வு நிறுவன பேராசிரியர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிகளில் படிக்கும்போதே, மாணவர்களிடம் உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    288 ஆசிரியர்கள்

    சேலம் மாவட்டத்தில் 9, 10-ம் வகுப்பு இடம்பெற்ற 288 அரசு பள்ளிகள் உள்ளன. எனவே பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் 288 வழிகாட்டி ஆசிரியர்கள் மாவட்டத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் 28 பேரை நியமனம் செய்து பாஜக தலைவர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். #BJP #TNElectionIncharge
    சென்னை:

    பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதைத்தொடர்ந்து, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    தமிழகத்திலும் அ.தி.மு.க., தி.மு.க, அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டன.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் 28 பேரை நியமனம் செய்து பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியின் துறை வாரியாக 28 பேர் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    வானதி ஸ்ரீனிவாசன், மோகன் ராஜுலு, நயினார் நாகேந்திரன், எஸ்.ஆர்.சேகர், கே.டி.ராகவன், ஏ.பி.முருகானந்தம், கரு.நாகராஜன், கனக சபாபதி, ஜி.கே.நாகராஜ் உள்பட 28 பேரை நியமனம் செய்து உத்தரவிட்டார். #BJP #TNElectionIncharge
    கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை நியமனம் செய்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #DMK #SenthilBalaji
    சென்னை:

    கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி கடந்த மாதம் திமுகவில் இணைந்தார். தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைந்தார்.

    அப்போது பேசிய அவர், கரூர் மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப என்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளேன் என்றார். 

    இந்நிலையில், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை நியமனம் செய்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    மேலும், ஏற்கனவே மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்த நன்னியூர் ராஜேந்திரன் திமுக நெசவாளர் அணி தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்துள்ளார். #DMK #SenthilBalaji
    அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்ஸரா ரெட்டியை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். #Congress #RahulGandhi #ApsaraReddy
    புதுடெல்லி:

    சமூக செயற்பாட்டாளராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றி வருபவர் திருநங்கை அப்சரா ரெட்டி. இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    இந்நிலையில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டியை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, அப்சரா ரெட்டி இன்று டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். #Congress #RahulGandhi #ApsaraReddy
    பாராளுமன்ற தேர்தலுக்கான தமிழக பாஜக பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமனம் செய்து பாஜக தலைமை இன்று அறிவித்துள்ளது. #BJP #TNElectionIncharge #PiyushGoyal
    புதுடெல்லி:

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என தீவிரமாக அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், பாஜக தலைமை இன்று வெளியிட்ட அறிக்கையில், பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவித்துள்ளது.



    அதன்படி, தமிழகத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி பியூஷ் கோயல், புதுச்சேரிக்கு சி.டி.ரவி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதேபோல், கர்நாடகா, டெல்லி, திரிபுரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், அந்தமான், உ.பி. உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு பாஜக தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #BJP #TNElectionIncharge #PiyushGoyal
    சென்னை ஐகோர்ட்டுக்கு அமலாக்கத்துறையின் வக்கீலாக தமிழக பா.ஜனதா பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனின் கணவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #BJP #VanathiSrinivasan
    சென்னை:

    தமிழக பா.ஜனதா பொதுச் செயலாளர் வக்கீல் வானதி. இவரது கணவர் சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

    நாடு முழுவதும் பல மாநிலங்களில் அமலாக்கத்துறைக்கு வக்கீல்களை மத்திய அரசு நியமித்துள்ளது.

    இதில் சென்னை ஐகோர்ட்டுக்கு அமலாக்கத்துறையின் வக்கீலாக சீனிவாசனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவருடன் ஹேமலதா என்ற வக்கீலும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சீனிவாசன் ஐகோர்ட்டில் கடந்த 25 வருடங்களாக பணியாற்றி வருகிறார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.

    அகில பாரத வித்யார்த்தி பரி‌ஷத்தின் மாநில செயலாளராக பணியாற்றினார். பிரபல வக்கீல் பிரசாந்த் பூ‌ஷனிடம் சுப்ரீம் கோர்ட்டில் ஜூனியராக 3 ஆண்டுகள் பணியாற்றினார்.

    வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தேசிய இளைஞர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மோடி பிரதமராக வந்ததும் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். மத்திய அரசின் நிர்வாக தீர்ப்பாயத்தின் தலைமை வக்கீலாகவும் பணியாற்றி வருகிறார். #BJP #VanathiSrinivasan
    வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் என்பவரை வாட்ஸ்-அப் நிறுவனம் நியமித்து இருக்கிறது. #WhatsApp #AbhijitBose #India
    புதுடெல்லி:

    சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘வாட்ஸ்-அப்’ செயலியை கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 130 கோடி வாட்ஸ்-அப் வாடிக்கையாளர்களில் சுமார் 20 கோடி பேர் இந்தியர்கள் ஆவர்.

    இவ்வாறு மிகப்பெரிய வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் என்பவரை வாட்ஸ்-அப் நிறுவனம் நியமித்து இருக்கிறது. பிரபல மின்னணு பணப்பரிமாற்ற செயலியான எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    போலி செய்திகள் வேகமாக பரவுவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதாக வாட்ஸ்-அப் நிறுவனம் மீது இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், இந்த தலைவர் நியமனம் நடந்திருக்கிறது. முன்னதாக குறைதீர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் அதிகாரி ஒருவரை வாட்ஸ்-அப் நிறுவனம் சமீபத்தில் நியமித்தது குறிப்பிடத்தக்கது. #WhatsApp  #AbhijitBose #India
    சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக ஜெட்டி குசும் குமாரை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். #TelanganaAssemblyElections #Congress #StateWorkingPresident
    ஐதராபாத்:

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள டி.ஆர்.எஸ். கட்சி போராடி வருகிறது.

    காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதேபோல் பாஜகவும் களத்தில் இருக்கிறது.



    தெலுங்கானாவில் சோனியா காந்தி பிரசாரம் வரும் 22, 23-ம் தேதிகளில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதற்கிடையே, தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள 65 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி சமீபத்தில் வெளியிட்டது.

    இந்நிலையில், தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக ஜெட்டி குசும் குமாரை நியமனம் செய்யப்பட்டுள்ளார் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். #TelanganaAssemblyElections #Congress #StateWorkingPresident
    மேற்கு வங்காளத்தின் காங்கிரஸ் தலைவராக சோமேந்திரநாத் மித்ராவை நியமித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். #SomendraNathMitra #Congress #WestBengal
    கொல்கத்தா:

    2019 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தலில் எப்படியேனும் மீண்டும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவும், இந்த முறை தோல்வியை சந்திக்கக்கூடாது என காங்கிரஸ் கட்சியும் போராடி வருகின்றனர்.

    இதற்காக நாடு முழுவதும், பிரச்சாரங்களும், மக்கள் நலப்பணிகளும் என இரு கட்சியினரும் செயல்படுகின்றனர். அதே சமயம் கட்சியின் அஸ்திவாரத்தை பலப்படுத்தவும், மக்கள் இழந்த நம்பிக்கையை மீண்டும் அடையவும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே மாற்றங்களை செய்து வருகிறது.

    அதன்படி, மேற்கு வங்காள மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராக சோமேந்திரநாத் மித்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. அதேபோல்,  பிரச்சாரக்குழுவின் தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்ரியும், ஒருங்கிணைப்புக்குழு தலைவராக பிரதீப் பட்டாச்சாரியாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். #SomendraNathMitra #Congress #WestBengal
    ×