என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காணாமல் போன மீனவர்களை உடனே மீட்க வேண்டும்- ஜிகே வாசன் கோரிக்கை
Byமாலை மலர்9 Oct 2018 8:08 AM GMT (Updated: 9 Oct 2018 8:08 AM GMT)
தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை உடனே மீட்க வேண்டும் என ஜிகே வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். #GKVasan
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் சுமார் 400 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என்பதால் மீனவக் குடும்பங்கள் சோகத்தில் முழ்கியுள்ளனர்.
காணாமல் போன மீனவர்கள் எப்போது திரும்பி வருவார்கள் என்ற ஏக்கத்துடன் குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள். மத்திய மாநில அரசுகள் நவீன தொழில் நுட்பத்துடன் 24 மணி நேர தீவிர தேடுதல் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு அனைத்து மீனவர்களையும் பத்திரமாக மீட்டு, அவர்களின் படகுகளையும் கண்டுபிடித்து கொண்டுவர வேண்டும். தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கும், அவர்களின் பாதுகாப்புக்கும் இன்னும் அதிக அக்கறை கொண்டு நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் மீனவர்களின் பாதுகாப்பான மீன்பிடித்தொழிலுக்கு 24 மணி நேர பணிகளை துரிதமாக தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GKVasan
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் சுமார் 400 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என்பதால் மீனவக் குடும்பங்கள் சோகத்தில் முழ்கியுள்ளனர்.
காணாமல் போன மீனவர்கள் எப்போது திரும்பி வருவார்கள் என்ற ஏக்கத்துடன் குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள். மத்திய மாநில அரசுகள் நவீன தொழில் நுட்பத்துடன் 24 மணி நேர தீவிர தேடுதல் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு அனைத்து மீனவர்களையும் பத்திரமாக மீட்டு, அவர்களின் படகுகளையும் கண்டுபிடித்து கொண்டுவர வேண்டும். தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கும், அவர்களின் பாதுகாப்புக்கும் இன்னும் அதிக அக்கறை கொண்டு நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் மீனவர்களின் பாதுகாப்பான மீன்பிடித்தொழிலுக்கு 24 மணி நேர பணிகளை துரிதமாக தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GKVasan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X