search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரம் அருகே பெண் கற்பழித்து கொலை? அழுகிய நிலையில் உடல் மீட்பு
    X

    சிதம்பரம் அருகே பெண் கற்பழித்து கொலை? அழுகிய நிலையில் உடல் மீட்பு

    சிதம்பரம் அருகே வீட்டுக்குள் அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மனைவி பிரேமா (வயது 50). இவர் பி.முட்லூரில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். 

    பிரேமாவின் வீடு கடந்த சில நாட்களாக பூட்டிகிடந்தது. இந்த நிலையில் இன்று மதியம் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த வீட்டுமுன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    இதுகுறித்து அவர்கள் பரங்கிபேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். அங்கு நிர்வாண நிலையில் பிரேமா பிணமாக கிடந்தார். மேலும் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரது தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் ரத்தக்காயங் களும் இருந்தன.

    இதையடுத்து போலீசார் பிரேமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேமா பிணமாக கிடந்தது பற்றி அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். பிரேமாவை யாராவது கற்பழித்து கொலை செய்தார்களா? அல்லது எப்படி இறந்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×