search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் கொள்ளையன் விபத்தில் பலி - டிரைவரை படுகொலை செய்த நண்பர்கள்
    X

    செல்போன் கொள்ளையன் விபத்தில் பலி - டிரைவரை படுகொலை செய்த நண்பர்கள்

    மாதவரம் அருகே செல்போன் கொள்ளையன் விபத்தில் பலியானதை அடுத்து அவரது நண்பர்கள் லாரி டிரைவரை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. #accident

    மாதவரம்:

    அம்பத்தூர் புகார் திருமலை பெரியார் நகரைச் சேர்ந்தவர் வீரராகவன்.

    இவர் நேற்று இரவு 10 மணி அளவில் எண்ணூர்- மாதவரம் 200 அடி சாலை பகுதியில் செல்போனில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர், வீரராகவனின் செல்போனை பறித்துச் சென்றனர்.

    அந்த சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி கொள்ளையர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த ஒரு கொள்ளையன் தவறி விழுந்து லாரியின் அடியில் சிக்கி உயிரிழந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் மணி கீழே இறங்கினார்.

    தங்களது நண்பன் பலியான நிலையில் விபத்தில் உயிர் தப்பிய மற்ற 2 கொள்ளையர்களும், டிரைவர் மணியை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தனர். இதில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் மாதவரம் பால் பண்ணை சட்டம்-ஒழுங்கு போலீசாரும், மஞ்சம்பாக்கம் போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது விபத்தில் சிக்கி உயிரிழந்த வாலிபரின் பெயர் சுகுமார் என்பதும், டிரைவர் மணியை தாக்கியது அவரது கூட்டாளிகளான புழல் மணி, வியாசர்பாடி வினோத் என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து தப்பி ஓடிய இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். டிரைவர் மணி, கொள்ளையன் சுகுமார் ஆகிய 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    கொலையுண்ட மணி, ஆற்காடு அருகே உள்ள எசையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தினரும் விபத்தில் பலியான சுகுமாரின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சோகத்துடன் காணப்பட்டனர்.

    சென்னையில் செல்போன், செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சூழலில் செல்போன் கொள்ளையர்கள் லாரி டிரைவர் ஒருவரை அடித்துக் கொலை செய்து இருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #accident

    Next Story
    ×