search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆறுமுகசாமி ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா வழக்கு
    X

    ஆறுமுகசாமி ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா வழக்கு

    ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணையின் போது தன் தரப்பு வக்கீலையும் அனுமதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில், ஜெ.தீபா வழக்கு தொடர்ந்துள்ளார். #JDeepa #ArumugasamyCommission
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தின் விசாரணையின் போது தன் தரப்பு வக்கீல் ஒருவரை அனுமதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா மனு கொடுத்தார்.

    இந்த மனுவை நீதிபதி ஆறுமுகசாமி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், நீதிபதி ஆறுமுகசாமியின் உத்தரவை ரத்து செய்யவேண்டும். தன் தரப்பு வக்கீலை விசாரணையின்போது உடன் இருக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #JDeepa #ArumugasamyCommission
    Next Story
    ×