search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாயில் இருந்து தங்கம் கடத்திய 2 பேர் சிக்கினர்- ரூ.10 லட்சம் நகை பறிமுதல்
    X

    துபாயில் இருந்து தங்கம் கடத்திய 2 பேர் சிக்கினர்- ரூ.10 லட்சம் நகை பறிமுதல்

    துபாயில் இருந்து சென்னை வந்த விமானங்களில் நடந்த சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஆந்திராவை சேர்ந்த பயணி ரங்கநாதன் (42) தனது உள்ளாடையில் தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்ததாக சுங்கத்துறை அதிகாரியிடம் பிடிபட்டார். அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள 140 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதேபோல துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் ஜானகிராமன் (47) என்ற பயணி எந்த ஆவணமும் இல்லாமல் 170 கிராம் தங்க நகைகள் வைத்திருந்தார். ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்படுகிறது. #ChennaiAirport
    Next Story
    ×