search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது
    X
    வீராணம் ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது

    வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தொடர்ந்து 300 கன அடி தண்ணீர் திறப்பு

    வீராணம் ஏரியில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாகவும், விவசாயிகளின் உயிர்நாடியாகவும் விளங்கும் வீராணம் ஏரி காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கீழணையில் இருந்து கடந்த ஜூலை 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 1,350 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவான 1,350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து 47 அடியாகவே வைக்கப்பட்டுள்ளது.

    விவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஏரியில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இன்றும் அதே அளவு தண்ணீர் விவசாயத்துக்கு திறக்கப்பட்டது.

    சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த மாதம் 14-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று 72 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது நேற்றைய விட 2 கன அடி குறைவாகும். #VeeranamLake




    Next Story
    ×