search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- லஞ்ச ஒழிப்பு போலீசில் திமுக வக்கீல்கள் மனு
    X

    அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- லஞ்ச ஒழிப்பு போலீசில் திமுக வக்கீல்கள் மனு

    அமைச்சர் விஜயபாஸ்கர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க. தலைமை நிலைய வக்கீல் அணி சார்பில் வக்கீல்கள் லஞ்ச ஒழிப்பு போலீசில் மனு அளித்துள்ளனர். #Vijayabaskar #DMK
    ஆலந்தூர்:

    அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

    ஆனால் சோதனை நடந்த பிறகு இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தி.மு.க. வக்கீல்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

    இந்தநிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க. தலைமை நிலைய வக்கீல் அணி சார்பில் வக்கீல்கள் முத்துகுமார், நீலகண்டன் ஆகியோர் இன்று பரங்கிமலை லஞ்ச ஒழிப்பு தலைமை அலுவலகத்துக்கு சென்று அதிகாரி ஜெயந்த் முரளியை சந்தித்து மனு அளித்தனர். அவர் புகார் மனுவை பெற்றுக்கொண்டு அதற்கான ஒப்புதல் சீட்டை அளித்தார்.

    இதுபற்றி வக்கீல்கள் முத்துக்குமார், நீலகண்டன் கூறுகையில், ‘‘வருமான வரித்துறை அளித்த பரிந்துரைப் படி அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம்’’ என்றனர். #Vijayabaskar
    Next Story
    ×