search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பரங்குன்றத்தில் 20 ரூபாய்  டோக்கன் சிஸ்டம் எடுபடாது- அமைச்சர் உதயகுமார் தாக்கு
    X

    திருப்பரங்குன்றத்தில் 20 ரூபாய் டோக்கன் சிஸ்டம் எடுபடாது- அமைச்சர் உதயகுமார் தாக்கு

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் சிஸ்டம் எடுபடாது என அமைச்சர் உதயகுமார் கூறினார். #thiruparankundramelection
    ஆரணி:

    ஆரணி அடுத்த சேவூரில், தமிழக அரசு சாதனைகளை விளக்கும் சைக்கிள் பேரணி வரும் 17-ந் தேதி நடக்கிறது. இதற்கான விளக்க கூட்டம் சேவூரில் நேற்றிரவு நடந்தது. வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:- 

    ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பதற்கு எதிராக வழக்கிற்கு மேல் வழக்குகளை போட்டனர். தற்போது கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு வலியுறுத்தினர். அதற்கு, நிறைய வழக்குகள் உள்ளது எனக்கூறி முதல்-அமைச்சர் இடம் தரமறுத்தார்.
    மறுநாள் காலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிரான அத்தனை வழக்குகளையும் வாபஸ் பெற்று விட்டனர். இதில் இருந்து வழக்குகளை போட்டவர்களை பின்னால் இருந்து இயக்கியது தி.மு.க. தான் என தெரிகிறது. இனி ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எந்த தடையும் இல்லை என்றார்.

    இதைத்தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வாக்காளர்களிடம் 20 ரூபாய் டோக்கன் சிஸ்டம் எடுபடாது. தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி சிஸ்டம் தான் வெற்றிபெறும் என்றார்.  #thiruparankundramelection
    Next Story
    ×