என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒக்கி புயலில் உயிரிழந்த, காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் 188 பேருக்கு அரசுப்பணி
Byமாலை மலர்7 Jun 2018 4:10 PM GMT (Updated: 7 Jun 2018 4:10 PM GMT)
கடந்தாண்டு இறுதியில் வீசிய ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 188 பேருக்கு அரசுப்பணி அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை:
கடந்தாண்டு இறுதியில் தமிழக கடலோர பகுதிகளில் ஒக்கி புயல் தாக்கியது. குறிப்பாக கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பல மீனவர்கள் இந்த புயலில் சிக்கி பலியாகினர். பலர் மாயமான நிலையில், அவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை.
இதனால், புயலில் பலியான மீனவர்களின் எண்ணிக்கையும் துல்லியமாக இல்லை. பலியான மற்றும் காணமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு அப்போது நிவாரணம் அளிக்கப்பட்டது. மேலும், அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற உறுதியும் அளிக்கப்பட்டது.
இதற்கேற்ப அவர்களின் குடும்ப சூழல்களை கருத்தில் கொண்டு 188 பேருக்கு அரசு வேலை வழங்க கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர் மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு பணி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சமூக நலத்துறை மற்றும் வருவாய் துறையில் அவர்களுக்கு பணி ஒதுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X