என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி விமான நிலையத்தில் ரூ.33 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்
Byமாலை மலர்23 April 2018 8:05 AM GMT (Updated: 23 April 2018 8:05 AM GMT)
திருச்சி விமான நிலையத்தில் ரூ.33 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி:
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி விமான சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் தங்கம் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டு பிடித்து பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று கோலாலம்பூர் செல்ல வந்த பயணியிடம் ரூ.33 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியில் இருந்து கொழும்பு வழியாக கோலாலம்பூர் செல்ல வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த ஜெயிலாபுதின் என்பவர் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்த ரூ.33 லட்சம் மதிப்புள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு பணத்தினை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அந்த நபரிடம் வெளிநாட்டு பணத்தாள்கள் எப்படி கிடைத்தது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி விமான சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் தங்கம் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டு பிடித்து பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று கோலாலம்பூர் செல்ல வந்த பயணியிடம் ரூ.33 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியில் இருந்து கொழும்பு வழியாக கோலாலம்பூர் செல்ல வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த ஜெயிலாபுதின் என்பவர் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்த ரூ.33 லட்சம் மதிப்புள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு பணத்தினை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அந்த நபரிடம் வெளிநாட்டு பணத்தாள்கள் எப்படி கிடைத்தது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X